Sunday, February 10, 2013

Vadivel coming soon - அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வடிவேல்!

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வடிவேல்!


 
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தமிழ் சினிமாவில் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார் வடிவேலு.

அரசியல் மாற்றத்திற்கு பிறகு மம்பட்டியான், மறுபடியும் ஒரு காதல் என்ற படங்கள் மட்டுமே வெளிவந்தன. அவரின் ரசிகர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

நீண்ட கால ஓய்விற்கு பிறகு மீண்டும் நடிப்பு களத்தில் இறங்க திட்டமிட்டு இருக்கிறார் வடிவேலு. மூன்று படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகம், AGS நிறுவனம் தயாரிப்பில் யுவராஜ் இயக்கும் படம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

யுவராஜ் இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு தெனாலிராமன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் இரட்டை வேடத்தில் காமெடி அதகளம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் வடிவேலு.

Ajith Final Shotting - இறுதி கட்டப் படப்பிடிப்பில் அஜீத்

இறுதி கட்டப் படப்பிடிப்பில் அஜீத்


அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் தயாரிப்பு பணிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 7 மாதங்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் பெயர், புகைப்படங்கள் போன்ற எதுவுமே வெளிவராமல் பாதுகாத்து வருகிறார்கள்.

சென்னை, மும்பை, பெங்களூரு என தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்க இருக்கிறது.

அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. பில்லா படத்தினைத் தொடர்ந்து அஜித் - விஷ்ணுவர்தன் இணைவதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் குறித்து விஷ்ணுவர்தன் தனது டிவிட்டர் இணையத்தில் " எனது படத்தினைப் பற்றியும், தலைப்பு என்ன என்பது குறித்தும் எனக்கு தெரிவிக்க ஆசை தான். ஆனால் தற்போது கூறுவது மிகவும் சீக்கிரமாக தெரிகிறது.

தயாரிப்பாளர் தான் படத்தின் தலைப்பை வெளியிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சி. ஆகையால் படத்தின் தலைப்பை விரைவில் கூறுகிறேன். " என்று கூறியுள்ளார்.

Vikram and Shankar in I - அதி தீவிர 'ஐ' முயற்சி!

அதி தீவிர 'ஐ' முயற்சி!


 
தாண்டவம், டேவிட் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தால் இப்போது விக்ரம் முழுவதும் நம்பி இருப்பது 'ஐ' படத்தை தான்.

அந்நியன் படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் - விக்ரம் இணைந்து இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது 'ஐ'. விக்ரமுடன் எமி ஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார், சுரேஷ் கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, 'அந்நியன்' படத்தினை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தினையும் தயாரித்து வருகிறது.

இப்படம்  குறித்து விக்ரம்," 'ஐ' படத்தில் வித்தியாசமான வேடத்தில் தோன்ற இருக்கிறேன். என்னை பொருத்த வரையில் 'ஐ' வாழ்வா, சாவா முயற்சி தான்.

ஒரே படத்தில் ஒல்லியாகவும், குண்டாகவும் நடிக்க இருக்கிறேன். எனது உடலமைப்பை முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறேன். கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்கும் போது, 'அந்நியன்' படத்தை விட 10 மடங்கு பெரிதாக 'ஐ' படம் இருக்கும்.

பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்தியிலும் வெளிவரும். 'ஐ' படத்தில் நான் எடுத்து இருக்கும் முயற்சி வேறு எந்த ஒரு நடிகராவது எடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அவ்வளவு கஷ்டமான வேடத்தில் நடித்து இருக்கிறேன்.

ஐ படத்திற்காக மிகவும் உடம்பை குறைத்து இருப்பதால் எனது குழந்தைகள் 'அப்பா.. உங்களுக்கு என்ன ஆச்சு? என்று கேட்கிறார்கள். எனது உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். '" என்று கூறி இருக்கிறார்.

Singam 2 -கோடையில் உறுமத் தயாராகும் சிங்கம் 2

கோடையில் உறுமத் தயாராகும் 'சிங்கம் 2'

 
'மாற்றான்' கொடுத்த பெருத்த ஏமாற்றத்தினை அடுத்து சூர்யா 'சிங்கம் 2' படத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

சிங்கம் படத்தின் தொடர்ச்சி என்பதால் சிங்கம் 2 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ஹரி இயக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட்டாராம் ஹரி. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கென்யா அல்லது தான்சானியா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஹரி ஏற்கன்வே இந்நாட்டிற்கு சென்று கதைக்கு ஏற்ற படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்து விட்டாராம்.

'சிங்கம் 2' திரைப்படம் கோடை விடுமுறைக்கு கல்லா கட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளிக்கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.