அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வடிவேல்!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தமிழ் சினிமாவில் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார் வடிவேலு.
அரசியல் மாற்றத்திற்கு பிறகு மம்பட்டியான், மறுபடியும் ஒரு காதல் என்ற படங்கள் மட்டுமே வெளிவந்தன. அவரின் ரசிகர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
நீண்ட கால ஓய்விற்கு பிறகு மீண்டும் நடிப்பு களத்தில் இறங்க திட்டமிட்டு இருக்கிறார் வடிவேலு. மூன்று படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகம், AGS நிறுவனம் தயாரிப்பில் யுவராஜ் இயக்கும் படம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
யுவராஜ் இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு தெனாலிராமன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் இரட்டை வேடத்தில் காமெடி அதகளம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் வடிவேலு.